Posts

Showing posts from January, 2021

கவிதை

 ஒரு நாளை  எப்படி தொடங்குவது  என்பதை நான்  அறிந்ததே இல்லை.  எப்படியும் தொடங்கியிருக்கிறேன்  மௌனமாக, சிரிப்பாக,  அழுகையோடு, ஏதோ நினைவுகளோடு.  அழுகை வருவதில்லை  பல மரண வீடுகளிலும்.  மனம் சிரிப்பதில்லை  திரையில் வரும்  பல நகைச்சுவைகளில்.  குறிப்பிட்ட நேரத்தில்  முடிக்கத் தெரிவதில்லை  பலவற்றை.  பயமுறுத்துகின்றன  காலஅட்டவணைகளும்  தேர்வு அட்டவணைகளும்.  தூங்கும் நேர விழிக்கும் நேர  ஒழுங்கு என்பதிலோ,  இது இப்படித்தான் என்ற இயற்கையற்ற கட்டுகளிலோ  எந்த நம்பிக்கையுமில்லை.  யாருக்கான முடிவையும்  எனக்கான முடிவையுமே  நான் அவ்வப்போது எடுப்பதேயில்லை.   வெற்று நம்பிக்கைகளுக்காகவும் பாசிசத்திற்காகவும்  நான் குரல் கொடுப்பதில்லை.  பிரச்சனை நான் யாராக இருக்கிறேன்  என்பதிலில்லை.  நான் யாராக இருக்க வேண்டும்  என்று யாரோ நினைப்பதில்தான்.

கொரோனா கால கவிதை 2

காட்டு மழை பெய்கிறது. சத்தம் மட்டும் கேட்கிறது.  ஜன்னல், கதவுகளுக்கு  இரும்புத்திரை  இருவாரங்களுக்கு இடப்பட்டிருக்கிறது.  தணியா சூடு  உடலுக்கும் மனதுக்கும்.  காய்ச்சல் கண்டிருக்கிறது உடல். தனிமை கொண்டிருக்கிறது மனம். உலகை உலுக்கும் நோய்த்தொற்று பாரபட்சமின்றி என்னிடமும்  தோளுரசிக் கொள்கிறது.  இந்த நோய்மையில், தனிமையில் இறந்து போனவர்களுக்கான அஞ்சலியை ஆத்மார்த்தமாய் சொல்கிறேன் இன்னொருமுறை.  தேநீர் ஒன்று வாசலில்  அன்புக் கரங்களால்.  அருகிலிருப்பதையும் விலகியிருப்பதையும்  முடிவு செய்வது  மனம் மட்டுமே! 

கொரோனா கால கவிதை 1

இரவெல்லாம் விளக்கை ஒளிர விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறேன். தலைமாட்டில் ஒன்று கால்மாட்டில் ஒன்று என்று பிள்ளைக் குட்டிகளோடு உறங்கியிருந்துவிட்டு இந்த திடீர் தனிமை கொஞ்சம் திணறடிக்கத்தான் செய்கிறது. இருட்டு இன்னும் கூடுதலாய் மிரட்டுகிறது. விடிந்தவுடன் என் பால்கனி சிட்டுக்குருவிகளின் குரல் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காண முடியாத அத்தனை முகங்களும் விழித் திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த புலம்பல்களுக்கிடையில் என் அறையிலேயே உள்ள இரண்டு குரோட்டன் செடிகளுக்கு நீர் பாய்ச்ச மறந்துவிட்டேன். அவைகளும் தனியாகத்தான் இருக்கிறது. ஆனால் சிரித்துக்கொண்டே...

கவிதை

விலங்கினங்களிலேயே  ஒரு தினுசான,  உயரிய விலங்கு நாம்.  ஹோமோ செப்பியன்ஸ் என்ற அடைமொழி நமக்குண்டு.  உயர்ந்த அறிவாளி என்று  நம்மை நாமே பிதற்றித் திரிவோம்.  காடு மலைகள் கடந்து பெருநகரங்களில்  குடிபெயர்ந்திருக்கிறோம்.  மானுடம் வளர்த்த பெருமை  மொத்தமும் நம்மையே சேரும்.  குழுக்களாகப் பிரிந்தோம். இனங்களாகப் பிரிந்தோம்  ஒவ்வொன்றாக கண்டறிந்தோம். அறியாமையின் ஆடுகளத்தில் இறைவனை மையமாக்கினோம். கண்டங்களைக் கண்டறிந்தோம். நாடுகளை வரையறுத்தோம். சாதியை உருவாக்கினோம். மதங்களைக் கொணர்ந்தோம். பெரு வணிகர்களைப் பெருக்கினோம். நாகரிகம் அடைந்தோம். போர்கள் செய்தோம். புரட்சி செய்தோம். இனப்படுகொலைகள் செய்தோம். வன்புணர்வுகள் செய்தோம்.  கவிதைகள் செய்தோம்.  காவியங்கள் எழுதினோம். பெண்மையை மிதித்தோம். பெயரளவில் துதித்தோம். ஜனநாயகம் அமைத்தோம். நீதிமன்றங்கள் கட்டினோம். அரசியல் வளர்த்தோம்.  அரசியல் செய்தோம்.  சாதகமான இடத்தில்  இருந்துகொண்டு  எல்லாம் சரியென்றோம். பாதகமான படுஞ்செயலை  சட்டமென மாற்றி சரி செய்தோம்.  ஆண்ட பரம்பரை ஆளட்டு...

அன்பின் எழுத்தாளர் பாமா அவர்களுக்கு,

Image
அன்பின் எழுத்தாளர் பாமா அவர்களுக்கு,  நலம். நலமறிய விழைகிறேன். கடந்த மூன்று நாட்களாக உங்கள் 'கருக்கு' புத்தகத்தோடே சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன்.  என் அப்பா கிராமத்தில் பிறந்தவர் என்றாலும் எனக்கும் கிராமத்திற்குமான தொடர்பு என்பது முற்றிலும் இல்லாத ஒன்று. ஓரிரு முறைகள் மட்டுமே என் அப்பாவின் கிராமத்திற்கு சென்றிருக்கிறேன் என்கிற முறையில் கிராமத்தைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.  கடந்த மூன்று நாட்களாக என் அருகில் அமர்ந்து கொண்டு ஒரு கிராமத்தின் கதையை, அடித்தட்டு மக்களின் கதையை, உங்களின் கதையை என்னிடம் கூறியது போன்றதொரு உணர்வு.  கிராமங்கள் சாதிய அடிப்படையில் எப்படி பிரிந்திருக்கிறது? ஒவ்வொரு சாதி மக்களும் பிற சாதி மக்களை எப்படி பார்க்கிறார்கள்? தனிமனித வடுக்கள், துயரங்கள், வாழ்வு இப்படி எல்லாவற்றையும் விஸ்தரித்து காட்டியிருக்கிறது உங்கள் எழுத்து.  எழுத்தாளர் பிரபஞ்சன் இப்புத்தகத்தை பற்றிக் கூறும்போது அலங்காரம், ஆடம்பரம், அணிகலன்கள் எதுவும் இல்லாமல் உடைத்துக் கொண்டு கிளம்பும் ஊற்று மாதிரி வார்த்தைகள் வந்து விழுந்து இந்தத் தன் வரலாற்றை ஆக்கியிருக்...