கடிதம்
கடிதம் தொலைத்தொடர்பு கணிசமான இவ்வுலகில் கடிதம் என்ற வார்த்தை வழக்கொழிந்து போயிருக்கலாம் . கடிதம் எழுதுபவர்கள் பாகவதர் காலத்து மனிதன் என்று யாரேனும் எள்ளலாம் . அதைப் பற்றிய எந்த பிரக்ஞையோ கவலையோ எனக்கில்லை . எனக்கு கடிதம் எழுத மிகவும் பிடிக்கும் . காற்றில் கரைந்து போகாத வண்ணம் வார்த்தைகளை காகிதத்தில் சிறைபிடிக்கும் கடிதத் தொடர்பு அலாதியானது . சொல்ல நினைத்ததை எல்லாம் வார்த்தைகளில் சொல்லி விடவே முடியாது என்று தெரிந்திருந்தும் எழுதப்படும் வார்த்தைகளின் மேல் அத்தனை அபிமானம் எனக்கு . என் கடிதங்கள் யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையுமற்றது . அப்படி நான் படித்ததில் என்னை பாதித்த புத்தகங்களில் எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த கடிதம் என்ற வலைப்பதிவு . அந்த எழுத்தா...