Posts

Showing posts from July, 2021

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

Image
அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு, நலம். நலமறிய விழைகிறேன். மலையாளத் திரையுலகின் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக திகழும் நீங்கள் எத்தனையோ திரைப்படங்களில் என் மனம் கவர்ந்தவர். ஒரே கடல்  என்கின்ற திரைப்படத்தில் தொடங்கி பேரன்பு வரை உங்கள் நாயகத் தன்மையின் அழகியல் பலரையும் தொந்தரவு செய்யக்கூடியது. 'ஜாதி மல்லிப் பூச்சரமே' என்று பாடும் திரைப்பட நாயகன் மம்முட்டியின் மீது அவ்வளவு பிரேமம் எனக்கு. அதெல்லாம் ஒரு நாயகப் பிம்பம் அவ்வளவே.  திரைப்படங்களை கடந்த 'முஹமது குட்டி' என்னும் மனிதனின் அசலான அக தரிசனம்தான் இந்த 'மூன்றாம் பிறை' என்னும் நூல். தன் வாழ்வில் பயணப்பட்ட சம்பவங்களின் வெறும் தொகுப்பாக அல்லாமல் தன் பிழைகளை, அகந்தையை, புரிதலற்றத் தன்மையை வாழ்வியல் சாரங்களோடுச் சேர்த்து எளிதில் காணக் கிடைக்காத மூன்றாம் பிறையாக எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள்.  'காழ்ச்சப்பாடு' என்னும் மலையாள மூலத்தில் வந்த இப்புத்தகம் சகோதரி ஷைலஜா அவர்களால் அத்தனை இலகுவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காவிற்கு எனதன்பு. உண்மையில் நாயக பிம்பம் என்பது வெறும் திரையில் வரும் நட...