Posts

Showing posts from March, 2022

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

Image
அன்பின் எழுத்தாளர் நா. முத்துக்குமார் அவர்களுக்கு,  நீங்கள் உயிரோடு இருக்கும்போது உங்கள் படைப்புகளைப் படித்து விட்டு இப்படி ஒரு கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்க வேண்டும். அதனாலென்ன மறைந்த கலைஞர் பாலுமகேந்திராவை பார்த்து நீங்கள், இங்கு தானே இருக்கிறீர்கள்? காலத்தை வென்று நிற்கப் போகும் உங்கள் படைப்புகளை மரணத்தால் என்ன செய்துவிட இயலும் என்று கூறியது போல தம்பி முத்துக்குமார், உங்கள் படைப்புகள் இருக்கும் வரை நீங்களும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள். வேடிக்கை பார்ப்பவன் புத்தகத்தை தொடராக ஆனந்த விகடனில் நான் படித்ததில்லை. புத்தகமாக முழுமூச்சுடன் படித்தேன்.            எளிய விஷயங்களும், எளிய வார்த்தைகளும், எளிய மனிதர்களும் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை.           இந்த வாழ்க்கையில் நாம் வேடிக்கை பார்ப்பதற்கும் இந்த வாழ்க்கைக்குள் நம்மையே நாம் வேடிக்கை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உண்மையில் இலக்கியம் படிப்பவர்கள் அனைவராலும் இவ்வித்தியாசத்தை அறிந்துகொள்ள இயலுமா என்றுத் தெ...