Posts

Showing posts from November, 2019

கடிதம் 1 - அன்பின் எழுத்தாளர் திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு,

Image
அன்பின் எழுத்தாளர் திரு . மாரி செல்வராஜ் அவர்களுக்கு ,                         நலம் . நலம் அறிய விழைகிறேன் . இது கடிதத்திற்கான சம்பிரதாயம் மட்டுமல்ல , ஒரு சகோதர பாவத்தோடு உங்கள் நலமறிய விழைகிறேன் .                        உங்கள் சிறுகதை தொகுப்பான ‘ தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் ’ படித்த கையோடு, எழுதிக்கொண்டிருக்கிறேன் . கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு வெளியாகி உள்ள இப்புத்தகத்தில் , காட்சிகள் இன்னும் மாறாமல் அப்படியே இருப்பதுதான் வேதனை . பெரிய புனைவுகள் இல்லாமல் உங்கள் பால்யத்தின் சுவடுகளை , சீழ் பிடித்த ரணங்களை , நினைவுகளை கதைகளாக நிரப்பி இருக்கிறீர்கள் .                  ‘ கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்...

கடிதம்

கடிதம்           தொலைத்தொடர்பு கணிசமான இவ்வுலகில் கடிதம் என்ற வார்த்தை வழக்கொழிந்து போயிருக்கலாம் . கடிதம் எழுதுபவர்கள் பாகவதர் காலத்து மனிதன் என்று யாரேனும் எள்ளலாம் . அதைப் பற்றிய எந்த பிரக்ஞையோ கவலையோ எனக்கில்லை .             எனக்கு கடிதம் எழுத மிகவும் பிடிக்கும் . காற்றில் கரைந்து போகாத வண்ணம் வார்த்தைகளை காகிதத்தில் சிறைபிடிக்கும் கடிதத் தொடர்பு அலாதியானது .             சொல்ல நினைத்ததை எல்லாம் வார்த்தைகளில் சொல்லி விடவே முடியாது என்று தெரிந்திருந்தும் எழுதப்படும் வார்த்தைகளின் மேல் அத்தனை அபிமானம் எனக்கு . என் கடிதங்கள் யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையுமற்றது .               அப்படி நான் படித்ததில் என்னை பாதித்த புத்தகங்களில் எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த கடிதம் என்ற வலைப்பதிவு .               அந்த எழுத்தா...

வலசை அறிமுகம்

வலசை      உடல் ஏதோ ஒரு இடத்தில் உழன்று கொண்டிருக்கிறது . மனமோ பிரபஞ்சத்தில் பெயர் தெரியாத இடங்களுக்கெல்லாம் பயணித்துக் கொண்டிருக்கிறது .     வலசை பறவைகளும் விலங்குகளும் புவியின் மின்காந்தப் புலத்தை உணர்ந்து செயல்படுமாம் . எந்த மின்காந்தப் புலத்தையும் அறியாமல் வலசை மனிதர்கள் இன்னும் புலம்பெயர்ந்து கொண்டுதானே இருக்கிறோம் . எங்கெங்கோ வாழ்கிறோம் இல்லை வசிக்கிறோம் .     வலசையாய் மாறி ஏதோ வனாந்தரத்தில் உடலால் வசித்துக் கொண்டும் , மனதின் பரப்பெங்கும் அப்பி வைத்திருக்கும் வலியை , அழுகையை , இன்பத்தை , சுயத்தை , பயத்தை இன்னும் என்னென்னவோ உணர்வுகளை எல்லாம் கொட்டித் தீர்க்க முடியாத அத்தனையோடும் கொண்டாட்டமாய் வாழ்கின்றோம் . எண்ணப் பாதை உமிழும் நீர்க் குமிழ்களை சேகரித்து வார்த்தையாக்கும் முயற்சியே இவ்வலசை வலைத்தளம் .     இப்போதுதான் கொஞ்சம் வசப்பட்டு இருக்கின்ற வாசிப்பை , வாசிப்பு கொடுக்கும் ஏதோ ஒன்றை வார்த்தைகளால் உமிழத்   துடிக்கும் எத்தனிப்பை ஒருவேளை உங்களால் புரிந்துகொள்ள இயலும் . வலசை இனமே , வாருங்கள் ....